tag:blogger.com,1999:blog-8222760820292014062024-02-08T02:13:32.727-08:00லக்ஷ்மிசரவணக்குமார்saravanakumar lakshmihttp://www.blogger.com/profile/10166973772323805983noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-822276082029201406.post-77552953237333966222009-04-13T05:37:00.000-07:002009-04-13T06:44:17.854-07:00ஒரு நாடோடியின் நாட்குறிப்புகள்.<p> எல்லாவற்றுக்கும் பின்னால் என்னை அர்த்தப்படுத்திக்கொண்டிருப்பது என்னுடைய பயணங்கள்தான். இலக்கற்று சுற்றித்திரிந்த நாட்களிலெல்லாம் நான் கற்றுக்கொள்ள நேர்ந்த விசயங்கள் ஏராளம்.அப்படி பார்த்த பழகின எவ்வளவோ தினங்களை மனிதர்களைப்பற்றின குறிப்புகளைத்தான் எழுத விரும்புகிறேன்.இலக்கிய நண்பர்கள் தெரிந்த தெரியாத மனிதர்களென என் கதைகளைப் போன்றே அவற்றுக்கும் திசைகளில்லை........</p><p> தனுஷ்கோடியில் சில நாட்கள்......</p><p> எந்த வயதில் என்றும் எப்ப்டியென்றும் தெரியாத ஒரு ப்ந்தம் எனக்கு</p><p>தனுஷ்கோடியுடன் ஏற்ப்ப்ட்டது.பல நாட்களாக அங்கு போக வேண்டுனென்கிற என் விருப்பம் இருபத்தி இரண்டு வயதில்தான் கிடைத்தது.ஏதேதோ எதிர்பார்ப்பில் சென்றவனுக்கு சிதிலமுற்ற ஒரு கடற்கரையைப் பார்க்கவும் முதலில் சொல்லமுடியாத ஏமாற்றம். அடுத்த முறை அங்கு செல்லப்போவதில்லையென மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.ஆனால் அப்படி இருக்க முடியவில்லை.திரும்பி வந்த சில தினத்திலேயே இனம் புரியாததொரு எண்ணம் தொடர்ந்து அவ்வூரைப் பற்றி நினைக்கச் செய்துகொண்டிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையில் திரும்பவும் அங்கு செல்ல நேர்ந்த பொழுது வேறுவிதமான ஊராய் பட்டதுடன் மிக நெருக்கமான சொந்தம் இருப்பதைப் போல் உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் கரைக்கு வரும் அலைகலைப் பிடித்து விளையாடுவதற்கென்று அழிந்து போன ஊரின் பழைய குழந்தைகள் காத்துக்கிடப்பதைப் போன்றிருக்கும்.கடலில் இழுத்துச் செல்லப்பட்ட ரயிலிலிருந்த குழந்தைகள் கடைசியாய் என்ன பாடல்களைப் பாடியிருக்கும்.ஒவ்வொரு நிறுத்ததிலும் நின்றிருந்த குழந்தைகளுக்கு இவர்கள் கைகாட்டியதைப் போல் இவர்களுக்கு யார் கை காட்டியிருப்பார்கள்.எதுவுமே சந்தோச மானதாக இல்லை. எனக்கு விருப்பமானதொரு பாடலை அவர்களுக்காகப் பாடுகிறேன்.பெரும் அழிவின் சாட்சியாய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும'் காளி'... அவரின் பாடல்களில் உயிர் கொள்கிறது மீன் வாசமும் சகல நாட்டு வணிகர்களின் குரலும்.பல காலங்கலாக வெட்டப்படாத அவரின் வெண்மயிர்கள் கடந்து போன காலத்தின் சாட்சிகளாய் நீண்டு கொண்டிருக்கின்றன.</p><p> ராமேஸ்வரத்தி்ல் ஏற்றிக்கொண்ட பேருந்து பெரும் தயக்கத்திற்குப் பின் சத்திரத்தில் இறக்கிவிட்டுச்செல்கிறது. ஒரு துறவியைப் போல் சுழன்ற காற்று பெரும் மூர்க்கத்துடன் அணைத்துக்கொள்கிறது.நான் மட்டுமில்லை என்னோடு இன்னும் சிலர் சுற்றிப்பார்க்கும் ஆர்வத்திலும் எந்த விதமான உணர்வுகளுமின்றியும் இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.முதல் முறை பார்க்கும் சிலருக்கு என்ன இருக்கிரதென்ற ஏமாற்றம். சத்திரத்திலிருந்து கூட்டிப்போக வேன்காரர்கள் வரிசயாய் நிற்கிறார்கள். எதையும் பொருட்படுத்தாமல் மணலில் நடந்து சென்று கொண்டிருக்கிறேன் சொந்த ஊர்க்காரன்போல்.மதிய உணவிற்கென என்னிடம் எதுவுமில்லை அதனை ஒருபோதும் பொருட்படுத்துவதுமில்லை.காளி அய்யாவைத் தேடிச்செல்கிறேன் வழக்கம் போலவே இன்றும் புதிதாய் அறிமுகப் படுத்திக்கொல்ள வேண்டுமோவென்கிற தயக்கம்,அதிசயமாக என்னை நினைவு வைட்ய்திருக்கிறார். கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம் பிறகு வழக்கம் போல் நடந்து திரிகிறேன் ஏனென்று புரியாதவனாய்.</p><p> சில வருடங்கள் தொடர்ச்சியாக அங்கு போய்வருவதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகப்புரிகிறது. த்னுஷ்கோடி தனியான ஊரில்லை மிக நீண்ட வணிகப் பாரம்பரியமும் கலாச்சார தொடர்ச்சியும் அங்கிருந்து நமக்குக்கிடைக்கிறது.இன்று வரையிலும் சொல்லப்பட்டு வரும் குமரிக்கண்டத்தின் ஒரு நீட்சியாகத்தான் அதனைப் பார்க்க வேண்டும்.ஒரு ஆச்சர்யமான உண்மையை அங்கு செல்கிற யாவரும் உணராலாம் கடற்கரையில் அப்படியொரு அற்புதமான குடிநீர். அதுவும் இரண்டு மூன்று அடிகளுக்குள்ளாகவே,கடற்கரை தாகத்திற்கெனறே உருவாகியிருக்கும் போல்.. முடிவு பெறாத ஒரு ஏக்கம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது, சில இரவுகளாவது அங்கு தங்கி வரவேண்டும் என்பதுதான் அது,பார்க்கலாம் அடுத்த முறையோ அத்ற்கடுத்த முறையோ அது நடக்கும் என்றுதான் வழக்கம் போல் இப்பொழுதும் சமாதானம் சொல்லிக்கொல்கிறேன்...............</p>saravanakumar lakshmihttp://www.blogger.com/profile/10166973772323805983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-822276082029201406.post-44966687651497569942009-04-13T01:52:00.001-07:002009-04-13T02:57:02.798-07:00<p>இதோ அடுத்த தேர்தல் களத்தினை எதிர்நோக்கி ஒட்டுமொத்த இந்தியக் குடிமகன்களும் பரபரப்பாயிருக்கிற வேளையில் ஒரு அப்பாவி வாக்காளனின் கடடிதம்.ஆட்சியமைப்பதர்கான சாத்தியங்களை நமது அரசியல்வாதிகள் வெகு காலம் முன்பே அதன் சூட்சுமன்ங்களோடு புரிந்து கொண்டுவிட்டிருக்கிற்றார்கள். முன்பு சாதரண வாக்குறுதிகளோடு முடிந்து போகும் யுக்திகள் இன்று காலாவதியாகிவிட்டதால் அடுத்கட்டமாக பல்வேறு வழிகளை கையாளத்துவங்கிவிட்டிருக்கின்றனர்.சில நாட்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட திருமங்கலம் சட்டமன்றதேர்தலுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதால் அதனைப்பற்றியும் தற்போதுள்ள நிலை பற்றியும் பேச வேண்டும்.அடிப்படையில் எனது சொந்த ஊர் திருமங்கலம். சட்டமன்றதேர்தலின் போது சென்னையிலிருந்த என்னை நண்பர்களும் வீட்டிலிருந்தவர்களும் தொடர்ந்து அழைத்தபடியிருக்க தவிர்க்கமுடியாமல் செல்ல வேண்டியதாகிப்போனது .நல்லது,பின்பாக என்னென்ன கூத்துக்களை காண முடிந்திருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. முதலிலலென்னை அச்சுறுத்திய விசயம் அங்கிருந்த சூழல் அதன்பிறகுதான் பணம்.ஊடகங்களும் போதாக்குறைக்கு ஒரே விசயத்தினை போட்டுத்தேய்க்க யுத்தகளமாயிருந்தது ஊர்.இரண்டாயிரம் ரூபாயிலிருந்து நாகாயிரம் ரூபாய் வரை ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது இரண்டாயிரந்தான்.வாக்காளர்களைத்தாண்டி அதிகம் சம்பாதித்தது பூத் ஏஜென்ட்களாயிருந்தவர்கள்தான்.90சதவிகித வாக்கு என்றதில் பலர் ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள. எனக்கு அது ஏன் நூறு சதவிகிதமாக வில்லை என்பதுதான் ஆச்சர்யம்?</p><p> ஏனெனில் வோட்டு அளிப்பதற்கு முன்பாகவே முடிவு சொல்லப்பட்ட தேர்தல் அது.இந்த முறை மதுரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 'அண்ணன் அழகிரி அவர்கள்'வழக்கம்போலவே மூன்றரை லட்சம் வாக்குகளில் வெற்றி பெறுவாதாக சொல்லியிருக்கிறார்.நிச்ஸ்யமாக இதுவும் நடக்கும்தான், ஏனெனில் தேர்தலை நடத்துவதும் முடிவு அறிவிப்பதும் இவர்களேதான்.இங்கு சகிக்க முடியாத இன்னுமொரு காமெடி'வள்ளல் ஜே கே.ரித்தீஸ் அவர்கள்' ராமநாதபுரத்தில் போட்டியிடுவதுதான்.இந்த ந்வீன வள்ளலின் கடந்த காலங்களைப்பற்றின வதந்திகள் ஒரு புறம் இருக்கட்டும் இவர் திருனங்கலம் சட்டமன்றதேர்தலில் காட்டின அக்கறையைப் பற்றி சொல்ல வேண்டும். ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்த இவருக்கு தேர்தல் பணி செய்வதற்ககென்றே நுற்றுக்கணக்கானவர்கள் திருமங்கலத்திலிருந்து செல்கின்ரனர். காரணம் பணம் மட்டுமில்லை ஜாதியும்தான். வாழ்க ஜனநாயகம்.</p><p>மற்ற கூட்டனிகளைப் பற்றி சொல்வதற்கும் எராளமாயிருக்கின்றன,இவர்கள் ஈழப்பிரச்சனையில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிலிருந்தே தமிழர்களுகு இழைக்கும் துரோக்த்தினை தெரிந்து கொள்ளமுடியும்.தேர்தலை ஒட்டித்தான் உண்ணாவிரதங்களும் அறிக்கைகளும் பறந்து வந்து கொண்டிருக்கின்றன. சரியான பதி்களை எப்பொழுதும் மக்கள் கொடுப்பார்கள் என்பதெல்லாம் பழைய கதை இனி எல்லாம் பணம் தீர்மானிப்பவைதான்.நடந்த யாவற்றையும் மறக்கச் செய்வது எப்படியென நமது அரசில்வாதிகளுக்குத்தெரியும். சுலபமாக மறப்பது எப்படியென மக்களுக்கும் தெரியும்.</p><p>வாக்களிக்கப்போகும் முன் ஒரெயொருமுறை நம் ஈழத்து சகோதரர்களை நினைக்க முடிந்தால் யாருக்கு வாக்களிப்பதென தீர்மானிக்க எளிமையாயிருக்கும்.ஒரு சராசரி மனதனாக கூட இருக்க முடியத துரதிர்ஸ்டசாலிகளில்லை நாம்.வாக்கே போட வேணடாம் என்பது என்னுடைய முடிவு உங்களுடையதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.......</p><p> இப்படிக்கு</p><p> ஒன்னுந்தெரியாத வாக்காளன்.</p>saravanakumar lakshmihttp://www.blogger.com/profile/10166973772323805983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-822276082029201406.post-47862801887851120332009-04-13T01:33:00.000-07:002009-04-13T01:49:32.473-07:00<p>அபபா இறந்து போனார் </p><p>இத்ற்கு முன்பு அழாதிருந்தவாறுதான் </p><p>இன்றுமிருக்கத்தோன்றியது </p><p>மிகச்சிறிய இரண்டு குச்சிகளை </p><p>யாரோ </p><p>என் இமைகளில் பொறுத்துகின்றனர் </p><p>அழச்செய்துவிடும் பொருட்டு </p><p>இப்பொழுது </p><p>சிரிக்கத்தான் முடிந்தது </p><p>துயர்மிகுந்த இந்தச் சப்தங்களால் </p><p>அப்பாவின் உறக்கம் </p><p>களையக்கூடுமென </p><p>சுற்றியிருந்தவர்களின் அழுகையை </p><p>நிறுத்தச்சொன்னேன் </p><p>பெரும்பாலனவர்களுடைய எதிர்பார்ப்பும் </p><p>நானழுவது குறித்தே இருந்திக்க வேண்டும் </p><p>அவ்வப்பொழுது </p><p>தீவிரமாயென்னை அவதானித்தபடியிருந்தனர் </p><p>ஒருபோதும் அவர்களால் </p><p>புரிந்துககொள்ள முடியாது </p><p>என்னால் அழமுடியாதென்பதை </p><p>அபபாவின் உடல் தூக்கிச்செல்லப்பட்ட </p><p>வீதிகள்தோறும் என்னைப்போன்றே </p><p>சிரித்து உதிர்ந்து கிடந்தன </p><p>ரோஸ் நிற மலரிதழ்கள்</p><p>யாவரும் உறங்கிப்போன பின்னிரவில் </p><p>நானும் அப்பாவும் </p><p>உரையாடிக்கொண்டிருந்தோம் </p><p>மரணம் எப்படியிருக்குமென......</p>saravanakumar lakshmihttp://www.blogger.com/profile/10166973772323805983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-822276082029201406.post-60316406154593879032009-04-13T01:04:00.000-07:002009-04-13T01:30:09.134-07:00மன்னிப்பவர்களே மன்னிக்கப்படுகிறார்கள்<p>மன்னிப்புகளற்ற குற்றங்களென ஒன்றுமில்லை</p><p>நீங்கள் விரும்ப நேர்கிற பெண்</p><p>பிரிதொருவரின் மனைவியாயிருக்கலாம் </p><p>இறைடச்சல் மிகுந்த வீதியின் </p><p>இயக்கம் ஸ்தம்பிக்கும்படி </p><p>நிர்வாணமாய் ஓடும் பெண்ணின் உடலில் </p><p>தாராளமாக சில நிமிடங்கள் </p><p>கவனம் செலுத்டலாம் </p><p>நேரடியாகவோ மறைமுகமாகவோ </p><p>செய்துவிட நேர்கிற கொலைகளில் </p><p>பெரும்பாலும் உங்களின் பங்கென்பது </p><p>வெகு சொற்பமே </p><p>அனுமதியின்றி மழைபெய்வதைப் போல </p><p>மரங்களின் வழக்கமான </p><p>இயக்கத்தினைப்போல </p><p>எல்லாமே இயல்பானதுதான் </p><p>குற்றங்களனைத்தும் </p><p>தாமாகவே நடந்து விடுபவைகளாகத்தானிருக்கின்றன </p><p>இங்கு தண்டனைகள் அபத்தம் </p><p>அனாவசியமும் கூட </p><p>ஏனெனில் </p><p>மன்னிப்பவர்களே மன்னிக்கப்படுகிறார்கள்.....</p>saravanakumar lakshmihttp://www.blogger.com/profile/10166973772323805983noreply@blogger.com1